தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘இன்ஸ்டா’ பழக்கத்தால் இன்னல்: கல்லூரி மாணவியிடம் 26 பவுன் பறித்த வாலிபர் அதிரடி கைது

 

ராஜபாளையம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 26 பவுன் நகையை பறித்த வாலிபரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி சிவகாசி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தை சேர்ந்த ரவி மகன் லிவின் (25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். நாளடைவில் மாணவியை லிவின் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி, மாணவியிடம் இருந்து 26 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து மேலும் ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாக லிவின் கேட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மாணவி, ராஜபாளையத்திற்கு நேரில் வந்தால் தருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் மாணவி தகவல் தெரிவித்தார். இதையடுத்து வில்வின் வருவதாக கூறிய நாளில் போலீசாருடன் மாணவி காத்திருந்தார். ராஜபாளையம் வந்த லிவின், போலீசாருடன் மாணவி இருப்பதைப் பார்த்து, மீண்டும் அவரது ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் கர்நாடகா மாநிலம் சென்று அவரை பிடித்து ராஜபாளையம் அழைத்து வந்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் நகையை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, லிவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related News