தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலியின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது

 

Advertisement

ஆம்பூர்: காதலியின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் 25 வயதுள்ள இளம்பெண். இவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் அடுத்த அகரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (23), மருத்துவமனை ஊழியர். அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்த இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடையில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலை கைவிட்ட இளம்பெண், அசோக்கின் சந்திப்பையும் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அசோக் பலமுறை தொடர்பு கொண்டும் இளம்பெண் அவருக்கு பதிலளிக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அசோக், இளம்பெண்ணிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த ஆபாச போட்டோக்கள் என்னிடம் உள்ளது. அவற்றை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் இதை இளம்பெண் கண்டுகொள்ளவில்லையாம். இதையடுத்து அசோக் தான் தெரிவித்தபடி இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினாராம். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் இளம்பெண் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement