தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புது பைக்குக்கு பூஜை போட்டு திரும்பிய போது சோகம்; தவறி விழுந்து வாலிபர் பலி: அதிர்ச்சியில் நண்பன் தற்கொலை

தாராபுரம்: புதிதாக வாங்கிய பைக்கில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அதிர்ச்சியில் உடன் பயணித்த அவரது நண்பர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த மணக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித் தொழிலாளி. இவரது மகன் வீரக்குமார் (18).கல்லூரியில் ஐ.டி படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த தனசேகர் (18). இவரும் அதே கல்லூரியில் ஐடி படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

Advertisement

நேற்று முன்தினம் புதிதாக பைக் வாங்கிய வீரக்குமார், நண்பன் தனசேகருடன் தாராபுரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று பூஜை போட்டு விட்டு மீண்டும் பைக்கில் இருவரும் மணக்கடவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7 மணியளவில் தாராபுரம்- பழனி சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார், இவர்களது பைக்கில் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் வீரக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனசேகர் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். அக்கம்பக்கத்தினர் வீரக்குமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் நண்பர் வீரக்குமார் பலியான சம்பவம் அறிந்த தனசேகர், தனது வீட்டுற்கு சென்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

Related News