தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீசாரிடமிருந்து தப்பிக்க பள்ளி மாணவர்களை வைத்து மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

*316 குவாட்டர், பைக் பறிமுதல்

Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அருகே போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க பள்ளி மாணவர்களை வைத்து மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 316 குவாட்டர், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம் வழியாக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில், சாராயம் கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், நடமாடும் மதுவிலக்கு போலீசார் தமிழக எல்லை பகுதியில் வரும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்தலை தடுத்து வருகின்றனர். கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் அடுத்த கெங்கராயபாளையம் சோதனை சாவடியில் நேற்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளி சீருடைகளுடன் அமர வைத்துக்கொண்டு வாலிபர் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்தார்.

சந்தேகத்தின்பேரில் போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் 180 மில்லி அளவு கொண்ட 124 மதுபாட்டில்களும், 90 மில்லி அளவு கொண்ட 192 என மொத்தம் 316 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்த பர்வீன்(30) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பள்ளி சீருடையில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொண்டு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பர்வின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Related News