தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லிக்குப்பம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் காவல் நிலைய வளாகத்தில் செயல்படும் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் தலைமை காவலர்கள் குமரேசன், நாகராஜ் ஆகியோர் கண்டரக்கோட்டை அடுத்த மேல் குமாரமங்கலம் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வந்த பைக்கை விசாரணைக்காக நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற பைக்கை போலீசார் துரத்திச் சென்று பிடித்து விசாரணை செய்தனர்.

பைக்கில் வந்த வாலிபர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்தனர். அப்போது பைக்கில் இருந்த சாக்கு பையில் 2 அட்டை பெட்டிகள் இருந்ததும், அதில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் 180 மில்லி கொண்ட 100 மது பாட்டில்கள் விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

விசாரணையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆரியபாளையம் மணக்குள நகர் 4வது குறுக்குத் தெருவை சேர்ந்த செந்தில் மகன் சிரஞ்சீவி (23) என தெரிய வந்தது. இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News