தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சத்திரம் அருகே பரபரப்பு தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

*11 பைக்குகள் பறிமுதல்

Advertisement

புவனகிரி : கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் மேற்பார்வையில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் புதுச்சத்திரம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்து, அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சத்திரம் அருகே மேல்பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(27) என்பதும், மேலும் இவர் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், முத்தாண்டிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, கடலூர் முதுநகர், தூக்கணாம்பாக்கம் ஆகிய காவல் நிலைய சரக பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிந்தது.

பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஆதிநாராயணபுரம் கிராமத்தில் கோயிலுக்கு பின்புறம் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரி கிராமத்தில் குளக்கரை அருகில் மறைத்து வைத்திருந்த 5 பைக்குகள் என மொத்தம் 11 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News