தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை தீயணைப்புத்துறை ஆபீசில் லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம் அதிகாரியை சிக்க வைக்க பணம் வைத்த வாலிபர் மும்பையில் கைது: கூலியாக ரூ.40 ஆயிரம் பெற்றது அம்பலம்

 

Advertisement

நெல்லை: நெல்லை மண்டல தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.2,25,400 பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து, கையில் பையுடன் துணை இயக்குநர் அலுவலகத்திற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, துணை இயக்குநர் சரவணபாபு, அதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணியிடம் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் நெல்லை மாநகர துணை கமிஷனர் வினோத் சந்தாராம் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஆனந்த் (30) என்பவருக்கு சதியில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்த் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் வல்லநாடு உழக்குடியைச் சேர்ந்த முத்துச்சுடலை ஆகியோரை போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்தனர். கைதான தீயணைப்பு வீரர் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அலுவலகத்தில் பணத்தை வைத்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்பவரை மும்பை தாராவியில் போலீசார் கைது செய்து நேற்று நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

விஜயிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் துணை இயக்குநர் அலுவலகத்தில் பணத்தை வைப்பதற்காக அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனிடையே கைதான தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News