தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவனுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் ரயில் பெட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: தண்டவாளத்தில் வீசப்பட்டவர் மீது ரயில் ஏறியதில் கால் துண்டானது

Advertisement

பானிபட்: அரியானாவில் ரயில் பெட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம், பானிபட்டை சேர்ந்தவர் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கணவர் மேல் கோபமடைந்த அந்த இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் ஜூன் 24ம் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என கணவர் பானிபட் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் சோனிபட் மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த 35 வயது இளம் பெண் சேர்க்கப்பட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது. விசாரணை நடத்திய போலீசாரிடம் அந்த பெண் கூறுகையில், ‘‘நான் பானிபட் ரயில் நிலையத்தில் தனியாக உட்கார்ந்து இருந்தபோது எனது கணவர் அனுப்பியதாக கூறி என்னை ஒருவர் அழைத்துச்சென்றார். அவர் நிற்கும் ரயிலின் காலி ரயில்பெட்டியில் வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

பின்னர் மேலும் இரண்டு நபர்கள் அங்கு வந்தனர். அவர்களும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்கள் என்னை சோனிபட்டிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்கள் என்னை தண்டவாளத்தில் வீசினர். ரயில் என் மீது மோதியதில் எனது ஒரு காலை இழந்தேன்’’ என்றார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக பானிபட் போலீசார் பூஜ்ய எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். பானிபட் ரயில் காவல்துறைக்கு வழக்கை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Advertisement

Related News