தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடு புகுந்து பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்துக் கொலை: ஆண் நண்பர் தற்கொலை முயற்சி

 

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை எரித்துக் கொன்று ஆண் நண்பர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் அருகே குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன். அவரது மகன் அஜீஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பிரவீணா (39). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. பிரவீணா தன்னுடைய கணவனின் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு அருகில் உள்ள கூட்டாவு என்ற பகுதியை சேர்ந்த ஜிஜேஷ் என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் பிரவீணாவின் வீட்டுக்கு ஜிஜேஷ் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அஜீஷின் தந்தை அச்சுதனிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது நைசாக வீட்டுக்குள் நுழைந்த ஜிஜேஷ், வீட்டின் பின்புறத்தில் நின்று கொண்டு இருந்த பிரவீணாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

பின்னர் தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி அவர் தீ வைத்தார். அதைத்தொடர்ந்து 2 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரவீணாவும், ஜிஜேஷும் தீயில் கருகிக் கிடந்தனர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து தீயில் கருகி கிடந்த 2 பேரையும் மீட்டு கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீணா இன்று காலை இறந்தார். ஜிஜேஷுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த இரிக்கூர் போலீசார், பிரவீணாவை எரித்துக் கொலை செய்து ஜிஜேஷ் தற்கொலை செய்ய முயற்சிக்க காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News