தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபருடன் தகாத உறவு இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற மகன்

களக்காடு: வாலிபருடன் தகாத உறவில் இருந்த தாயை, மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் ரெஜினா (40). கூலி தொழிலாளி. இவரது கணவர் பூல்பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரு மகன்களுடன் ரெஜினா தனியாக வசித்து வந்தார். மூத்த மகன் கொம்பையா (22), கூலி தொழிலாளி. 13 வயதான 2வது மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினாவிற்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

Advertisement

நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையறிந்த கொம்பையா இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் தகாத உறவை அவர்கள் கைவிடவில்லை. இது அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவந்ததால், கொம்பையா அவமானமடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள கோயிலில் நடந்த கொடை விழாவை பார்க்க கொம்பையா சென்று விட்டார். அப்போது வாலிபரை வீட்டிற்கே வரவழைத்து ரெஜினா, அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதிகாலை 1 மணியளவில் கொடை விழாவிற்கு சென்ற கொம்பையா வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டிலுள்ள ஒரு அறையில் தாய் ரெஜினாவும், வாலிபரும் நெருக்கமாக இருந்ததை பார்த்த கொம்பையா கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த வாலிபர் நைசாக தப்பி ஓடி விட்டார்.

ஆத்திரத்தில் இருந்த கொம்பையா தாய் ரெஜினாவை சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படும் கம்பியால் கொடூரமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரெஜினா ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்தார். தொடர்ந்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். சிறிது நேரத்தில் ரெஜினா உயிரிழந்தார். பின்னர் தாயின் சடலத்தை வீட்டில் இருந்து இழுந்து சென்று அருகில் உள்ள கோயில் அருகே வீசி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெஜினாவின் சடலத்தை பார்த்து, மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொம்பையாவை கைது செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வாலிபருடன் நெருக்கமாக இருந்த தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement