தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாட்ஜில் இளம்பெண் கொலை

 

Advertisement

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே லாட்ஜில் இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக லாட்ஜ் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோபி ஜார்ஜ் (30). திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி என்று கூறி ஒரு இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து வந்தார். 2 பேரும் லாட்ஜில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஆற்றிங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

ஜோபி ஜார்ஜை காணவில்லை. லாட்ஜில் இருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்து பார்த்த போது ஜோபி ஜார்ஜ் அதிகாலை சுமார் 3 மணியளவில் அறையை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டது கோழிக்கோடு மாவட்டம் வடகரையை சேர்ந்த இளம்பெண் அஸ்மினா என்பது தெரியவந்தது. ஜோபி ஜார்ஜும், அஸ்மினாவும் இதற்கு முன்பு காயங்குளத்தில் ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்து உள்ளனர். 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோபி ஜார்ஜை தேடிவருகின்றனர்.

Advertisement