தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணை கொன்று நிர்வாணமாக 3 அடி குழியில் உட்கார்ந்தபடி புதைப்பு: கோபி அருகே பயங்கரம்

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கெட்டி செவியூரை சேர்ந்தவர் மோகன் (27). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை, சோளம் பயிர் செய்து உள்ளார். இவரது தோட்டத்தில் காளான் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் காளான் சேகரிக்கவும், கால்நடை தீவனங்களை சேகரிக்கவும் வருவது வழக்கம். நேற்று காலை இதேபோன்று செவியூர் அருகே உள்ள கும்மிபனையை சேர்ந்த முருகேசன் என்பவர், மோகனின் வாழைத்தோப்பிற்கு வந்த போது, வயல் வரப்பில் ரத்தக்கறையுடன் சிறிய கத்தி கிடந்தது.

Advertisement

அங்கு ரத்தம் சிந்தி இருந்த நிலையில், அருகில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்ட அடையாளமும் இருந்ததை கண்டு உடனடியாக தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து அங்கு வந்த சிறுவலூர் போலீசார், நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன், பெருந்துறை மருத்துவர் நந்தகுமார் முன்னிலையில் குழியை தோண்டினர். சுமார் 3 அடி ஆழத்தில் அமர்ந்த நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பூரில் இருந்து மோப்பநாய் ராஜா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்கு இருந்து சிறிது தூரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு ஓடியது. பின்னர் கோபி- திருப்பூர் சாலை வரை சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 30 வயது இருப்பதும், தலையில் கல்லால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தில் சரமாரி குத்தியும் கொலை செய்து, பின்னர் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரியவந்தால் மட்டுமே கொலையாளியை கண்டறிய முடியும் என்பதால், கொலை நடந்த நேரத்தில் அந்த பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement