தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நட்சத்திர ஓட்டலில் போதையில் இருக்கும் வயதான தொழிலதிபர்களை குறிவைத்து உல்லாசம்; 10 சவரன் செயின் பறித்த இளம் பெண் கள்ளக்காதலனுடன் கைது

 

* ரூ.6 லட்சத்திற்கு நகையை விற்று விலை உயர்ந்த பைக் வாங்கி காதலனுக்கு பரிசு அளித்ததும் விசாரணையில் அம்பலம்

சென்னை: நட்சத்திர ஓட்டலில் மது போதையில் இருந்த தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்து 10 சவரன் செயினை திருடி சென்ற இளம்பெண்ணை போலீசார் அவரது கள்ளக்காதலனுடன் கைது செய்தனர். திருடிய செயினை ரூ.6 லட்சத்திற்கு விற்று அந்த பணத்தில் விலை உயர்ந்த பைக் வாங்கி தனது காதலனுக்கு பரிசு அளித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி(47). தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 27ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் மதுபாரில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே அறிமுகமான பெண் தீபிகா(22) என்பவர் அந்த பாருக்கு வந்துள்ளார். இதை பார்த்த மணி அவருடன் பேசியுள்ளார். பிறகு இருவரும் ஒன்றாக பாரில் மது அருந்தியுள்ளனர். பிறகு இருவரும் அதே ஓட்டலில் 104 என்ற அறையை எடுத்து அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

பிறகு உடல் சோர்வு காரணமாக தொழிலதிபர் மணி தூங்கியதும், தீபிகா அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் செயினை பறித்து கொண்டு ஓட்டலில் இருந்து வெளியேறிவிட்டார். மறுநாள் எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. பிறகு ஒரு நாள் கழித்து கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி உதவி ஆய்வாளர் மேத்யூ ரோஸ் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அடிக்கடி வந்து செல்லும் குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த தீபிகா(எ)தீபலட்சுமி என தெரியவந்தது. உடனே தீபிகாவை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தீபிகாவுக்கு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை இருப்பதும், தீபிகாவுக்கு மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(23) என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால், அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது குழந்தையை சகோதரனிடம் விட்டுவிட்டு தற்போது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் திருமணம் செய்யாமல் சுற்றி வருவது ெதரியவந்தது. மேலும், சதீஷ்குமாருடன் இணைந்து வார இறுதி நாட்களில் தீபிகா பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்து பாரில் மது அருந்துவார். அப்போது வயதான தொழிலதிபர்களை நோட்டமிட்டு அவர்கள் போதை தலைக்கேறியதும், உதவி செய்வது போல் நடித்து தன் வசப்படுத்தி உல்லாசமாக இருந்து பணம் பறித்து வந்தது தெரியவந்தது. பணம் மற்றும் நகைகளை இழந்த தொழிலதிபர்கள் வெளியில் தெரிந்தால் தனது கவுரவம் பாதிக்கப்படும் என்பதால் தீபிகா மீது புகார் அளிக்காமல் இருந்து வந்தது தெரியவந்தது.

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீபிகா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் தொழிலதிபர் மணியை மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்து 10 சவரன் செயினை பறித்துள்ளனர். பிறகு அந்த செயினை தீபிகா அடகு கடையில் ‘தனது அம்மா மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். ஆப்ரேஷன் செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் நகைளை விற்பனை செய்ய வந்ததாக அடகுக்கடை உரிமையாரிடம் கூறி ரூ.6 லட்சத்திற்கு 10 சவரன் செயினை விற்பனை செய்துள்ளனர். பிறகு தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருக்கு விலை உயர்ந்த ‘கேடிஎம் டியூக்’ பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார். மீதமுள்ள பணத்தை இருவரும் செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து, நட்சத்திர ஓட்டல் பார்களில் வயதான தொழிலதிபர்களை குறிவைத்து உல்லாசமாக இருந்து நகை மற்றும் பணத்தை பறிக்க உதவிய கள்ளக்காதலன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து நகை விற்பனை செய்த பணத்தில் பைக் வாங்கியது மற்றும் செலவு செய்தது போக மீதமிருந்த ரூ.3,14,700 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு நகையை வாங்கிய அடகுக்கடை உரிமையாளரிடம் 10 சவரன் செயின் மீட்கப்பட்டது.