தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் சாதனை: தமிழ்நாடு அரசு பேட்டரி வீல்சேர் தந்து உதவிட வேண்டுகோள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியை சேர்ந்த ராஜா கவிதாவின் தம்பதியின் மகன் கோபிநாத். 7 ஆம் வகுப்பு படிக்கும்வரை மற்ற மாணவர்களை போல இயல்பாக பள்ளிக்கு சென்று வந்தார்.

8 ஆம் வகுப்பு படிக்கும் போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவர் பெற்றோரின் உறுதுணையுடன் பள்ளிக்கு சென்றுவந்தார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 531 மதிப்பின் பெற்று அசத்தினார். நீட் தேர்வு எழுதி 248 மதிப்பின் பெற்ற கோபிநாத் கடந்த ஆய்வுக்கு சென்று வந்தநிலையில் உடல் நிலை ஒத்துழைக்காததால் மருத்துவ கனவு சிதைந்தது.

இருப்பினும் விடாமுயற்சியுடன் அஞ்சல் வலி கல்வியில் ba பட்டப்படிப்பு முடித்த அவர் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்தார் ஆறு மாதங்கள் கண்ணும் கருத்துமாக படித்ததின் விளைவாக tnpsc குரூப் 2 எவிந் தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் பிரிவில் கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர் பணிக்கு மகன் தேர்வாகியுள்ளது அவரது பெற்றோரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திள்ளது.

பிறருக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வரும் கோபிநாத் பணிக்கு சென்று வரும் ஏதுவாக தமிழ்நாடு அரசு பேட்டரியில் இயங்கும் வீல் சர் வழங்கி உதவவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தளம் இருப்பதால் அங்கு தனக்கு பணி வழங்கவேண்டும் எனவும் பணிக்கு சென்று வரும் ஏதுவாக பேட்டரி வாகனம் ஒன்றையும் வழங்கி தமிழ்நாடு அரசு உதவவேண்டும் எனவும் கோபிநாத் கோரிக்கைவிடுத்து உள்ளார்.

Related News