தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகத்தில் ஆசிட் ஊற்றிய காயங்களுடன் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம் வீச்சு: பீகாரில் அதிர்ச்சி

கோபால்கஞ்ச்: முகத்தில் ஆசிட் ஊற்றிய காயங்களுடன் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம் வீசப்பட்ட நிலையில், அந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் போரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, ஷில்பி யாதவ் என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Advertisement

இது மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. லக்ராவ் பாக் பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகே, சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், இளஞ்சிவப்பு நிற சல்வார் சூட் அணிந்திருந்தார். அவரது முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் இருந்ததுடன், அடையாளத்தை மறைக்கும் கொடூரமான நோக்கில் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

இறந்தவர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, காணாமல் போனவர்களின் பட்டியலைச் சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் மோகன் குப்தா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News