தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண் அடித்துக்கொலை? காவல்நிலையத்தில் சரணடைந்த கணவரிடம் தீவிர விசாரணை

திருவொற்றியூர்: இளம்பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (26). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிகா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு கோபால் போதையில் இருந்தபோது திடீரென அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கோபால், திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று, ‘’எனது மனைவி ஜோதிகா திடீரென இறந்துவிட்டார்’ என்று தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார் சென்று பார்த்தபோது ஜோதிகா தலையில் காயத்துடன் இறந்துகிடந்தார்.

Advertisement

இதுசம்பந்தமாக கோபாலிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர், ‘’ஜோதிகா வேறொரு நபருடன் பழகிவந்ததால் அவரை கண்டித்து சண்டை போட்டேன். இதன்பின்னர் மது போதையில் தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்தபோது துப்பட்டாவை ஜன்னலில் கட்டி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்தார்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஜோதிகாவின் நெற்றியில் மட்டும் காயம் உள்ளதால் அவரது கணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜோதிகாவின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘’பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ஜோதிகாவின் சாவுக்கான காரணம் தெரியவரும்’’ என்று திருவொற்றியூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News