தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேற்று முன்தினம் பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம்

*தார்சாலை அமைக்க கோரிக்கை
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி செலவில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க, பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ஏஎப்டி மைதானத்துக்கு இடமாற்றம் செய்து கடந்த 16ம் தேதி முதல் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து செல்கின்றன. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து செல்லும் வழித்தடத்தில் சாலை வசதி இல்லாததால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாற வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி முழுவதும் சூறைகாற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் ேதங்கியது. அப்போது பேருந்துகள் சென்று வந்ததால், பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

மேலும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், தற்காலிக பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத தற்காலிக பேருந்து நிலையம் இனிவரும் பருவமழைக்கு எப்படி தாக்குபிடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News