தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம்: கொலை அம்பலமானதால் மாறி மாறி வாக்குமூலம் அளித்த இளைஞர்

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை அம்பலமானதால் இளைஞர் ஒருவர் மாறி மாறி வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் பெரிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் விடுதியில் திருச்சி சேர்ந்த லோகாம்பிகை என்ற இளம்பெண் ஒருவர் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை, அவரது செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் தெரியாத நிலையில் விடுதி வார்டன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
Advertisement

போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பார்த்த போது பெண்ணின் செல்போன் அழைப்பிற்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற பட்டியலை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண் பதிவாகி இருந்தது. அந்த பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இளம்பெண்ணிடம் பேசிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக போலீசார் தெரிவித்தார்.

குறிப்பாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும். அதே போன்று உடலில் வெட் ஊசி செலுத்தி கொலை செய்ததாகவும், அதுமட்டுமில்லாமல் மலை பகுதிக்கு அழைத்து சென்று தள்ளி கொலை செய்ததாகவும் மாறி மாறி இளைஞர் வாக்குமூலம் அளித்தார். வாலிபர் இளம்பெண்ணை அழைத்து சென்று கொலை செய்ததாக கூறிய இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது சேலம் காவல் நிலையத்தில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினர் உதவியுடன் மலைப்பகுதிக்கு சென்று அப்பகுதியில் இருந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சம்பவம் சேலம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement