மதுரையில் ரூ.8 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்
மதுரை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த 2 பயணிகளிடம் இருந்து 8 கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 9.15-க்கு இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை எடுத்து சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 2 பேரிடம் சோதனை செய்ததில் அவர்கள் கொண்டு வந்த உடைமையில் 2 பார்சல்களில் 4 கிலோ எடை கொண்ட 2 பார்சல்களில் 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. சர்வதேச மதிப்பில் 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் மதிப்பு ரூ.8 கோடி என சுங்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த காதர் மைதீன்(26) சென்னையைச் சேர்ந்தசாகுல் ஹமீது(50) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.