மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
Advertisement
ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்டு வாங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றால் அதற்கு நிதி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டின் பங்கைதான் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்காக தமிழக முதல்வர் பிரதமரை பார்ப்பது தவறா. தமிழ்நாட்டின் சாலை பணிகள் குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரை நான் நேரில் சந்தித்து முறையிட்டால் உடனடியாக எங்கள் இருவருக்கும் இடையே உறவு வந்துவிட்டது என்று அர்த்தமா. எடப்பாடி பழனிசாமி அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தின் உரிமைகளை பெறுவதற்காக ஒன்றிய அமைச்சரையும், பிரதமரையும் முதல்வரும், அமைச்சர்களும் சந்திப்பதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement