தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

Advertisement

கள்ளக்குறிச்சி: மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பில் தவறில்லை என எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடியாக கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பழைய பல்லவியை பாடி வருகிறார். திமுக தனது கொள்கையில் இருந்து என்றும் மாறாது. எந்த காலத்திலும் பாஜ கட்சியுடன் கூட்டணி என்பதும், அவர்களுடன் ஒத்துப்போவது என்பதும் கிடையாது. தமிழ்நாட்டில் நாம் கட்டும் அனைத்து வரிப்பணமும் ஒன்றிய அரசுக்கு செல்கிறது.

ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்டு வாங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றால் அதற்கு நிதி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டின் பங்கைதான் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்காக தமிழக முதல்வர் பிரதமரை பார்ப்பது தவறா. தமிழ்நாட்டின் சாலை பணிகள் குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரை நான் நேரில் சந்தித்து முறையிட்டால் உடனடியாக எங்கள் இருவருக்கும் இடையே உறவு வந்துவிட்டது என்று அர்த்தமா. எடப்பாடி பழனிசாமி அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தின் உரிமைகளை பெறுவதற்காக ஒன்றிய அமைச்சரையும், பிரதமரையும் முதல்வரும், அமைச்சர்களும் சந்திப்பதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News