தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழிபாட்டு தலம் இடித்து சேதம் சட்டீஸ்கரில் வன்முறை, கலவரம்: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்

ராய்பூர்: சட்டீஸ்கரில் இருதினங்களுக்கு முன் நடந்த வன்முறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சட்டீஸ்கரில் விஷ்ணு தியோ சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் பலடோபஜார் - பட்டாபரா என்ற மாவட்டத்தில் சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலம் உள்ளது. கடந்த திங்கள்கிழமை(10ம் தேதி) இந்த வழிபாட்டு தலத்தை அரசு தரப்பினர் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடிய சத்னாமி சமூகத்தினர் அரசுக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
Advertisement

பலடோபஜார் - பட்டாபரா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மீது கற்களை வீசியெறிந்தும், கட்டைகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் பலடோபஜார் - பட்டாபரா மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.சவுகான் ,காவல் கண்காணிப்பாளராக இருந்த சதானந்த் குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement

Related News