தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி

 

Advertisement

மதுரை: 2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர் 19 முதல் 25 வரை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636-இல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

இத்தாலிய கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டு திருமலை நாயக்கரின் ரசணையில் உருவான இந்த பிரமாண்ட மாளிகை, ஆங்கிலேயர் ஆட்சியில் 1860-ல் புதுப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் 1971-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று வரை மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.

நூற்றாண்டுகளை கடந்த இந்த வரலாற்று பொக்கிஷம் அதிக அளவிலான மனித வருகையால் சிதிலமடைய துவங்கியது. குறிப்பாக கட்டடத்தை சுமந்து நிற்கும் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், மேல் மாடமும் சேதம் மற்றும் விரிசல் அடையத்துவங்கின. இதைத் தொடர்து ஆசிய வங்கி உதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் மஹாலை புதுப்பிக்க முடிவு செய்தனர். கொரோனா முதல் அலையின் பொது ஊரடங்கு காரணமாக அப்பணி தாமதமான நிலையில் அதற்கு முன்பாக சிமெண்ட் மூலம் மேற்கொண்ட பணி பலனளிக்காததால், கட்டடம் கட்டப்பட்ட அதே முறையில் புதுப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டது பணிகள் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் பாரம்பரிய கட்டடங்கள், பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல் 25- ஆம் தேதி வரை உலக மரபு வார விழா‌ கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் நடைபெற்ற கிராம நிர்வாகம், நீதி, தேர்தல் முறை, வேளாண்மை, பாசன முறை, நீர் நிலை பாதுகாப்பு,வரிவிதிப்பு, கோவில் நிர்வாகம் போன்ற செய்திகளை கல்வெட்டுகள் வழியே அறிய முடிகிறது எனவே அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில், இந்த மரபு வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் உள்ள மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷமாக இருக்க கூடிய மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கர் மன்னரால் கி.பி. 1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் பார்வையிட ஒரு வாரத்திற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டது. இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு ஒலி ஒளி மூலம் விளக்கிகாட்டப்படும் இதற்கும் அனுமதி இலவசம்.

Advertisement