தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2034ல் உலக கோப்பை கால்பந்து: சவுதி அரேபியா நடத்த முட்டுக்கட்டைபோடும் சர்வதேச அமைப்புகள்; மனித உரிமை மீறல் விஸ்வரூபம் எடுக்கும்

லண்டன்: வரும் 2034ல் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு தரக்கூடாது என, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை திட்டவட்டமாக கூறியுள்ளது. கால் பந்து போட்டியில் அசைக்க முடியாத சக்தியாக சவுதி அரேபியா உருவெடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல கால்பந்து போட்டிகளை அந்த நாடு நடத்துகிறது. அந்த நாட்டின் சவுதி புரோ லீக் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட உலகப் புகழ் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். வரும் 2034ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த உரிமை கோரியுள்ள ஒரே நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது. எனவே, அந்த நாட்டிற்கே போட்டி நடத்தும் உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சவுதியின் கனவில் மண் அள்ளிப் போடும் விதமாக, மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னஸ்டி சர்வதேச அமைப்பு, விளையாட்டு மற்றும் உரிமைகள் கூட்டமைப்பு (எஸ்ஆர்ஏ), ஆகியவற்றின் அறிக்கை அமைந்துள்ளது.
Advertisement

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2034ல் உலக கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு தரக் கூடாது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) விதித்துள்ள மனித உரிமை தரக் கட்டுப்பாடுகளை எப்படி நிறைவேற்றும் என சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை. போட்டி நடத்துவதற்கான சவுதி அரேபியாவின் கோரிக்கை மனுவில், மனித உரிமை அமைப்புகளை அர்த்தமுள்ள வகையில் கலந்து ஆலோசித்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. சவுதி அரேபியாவுக்கு உரிமை அளித்தால், பெரியளவில் மனித உரிமை மீறல் ஆபத்துகள் எழும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News