தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகக்கோப்பை வில்வித்தை நம்பர் 2 கிப்சனை வீழ்த்திய சுரேகாவுக்கு வெண்கலம்

நாஞ்சிங்: உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் சீனாவின் நாஞ்சிங் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் காம்பவுண்ட் பிரிவில் துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய வீராங்கனையும், ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவருமான ஜோதி சுரேகா (29), காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் ரூய்ஸ் உடன் மோதினார். அந்த போட்டியில் 143-140 என்ற புள்ளிக் கணக்கில் சுரேகா வென்றார்.

Advertisement

இருப்பினும், அரை இறுதியில் மெக்சிகோவை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆண்ட்ரியா பெசேராவிடம், 143-145 என்ற புள்ளிக் கணக்கில் சுரேகா தோல்வியை தழுவினார். அதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீராங்கனை எல்லா கிப்சன் உடன் சுரேகா மோதினார். இப் போட்டியில் அற்புதமாக அம்புகளை எய்த சுரேகா 150-145 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார்.

அதையடுத்து, உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை அவர் தட்டிச் சென்றார். உலகக் கோப்பை பைனல் போட்டிகளில் சுரேகா ஜோதி இதற்கு முன் இரு முறை பங்கேற்றுள்ளார். 2022ல் ட்லாக்ஸ்கலாவிலும், 2023ல் ஹெர்ஸ்மோசிலோவிலும் நடந்த அந்த போட்டிகளில் துவக்க சுற்றுகளிலேயே, சுரேகா தோல்வியை தழுவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News