தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

சென்னை: உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, சென்னையில் கடந்த 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீனா, எகிப்து, போலந்து, பிரேசில், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Advertisement

இந்தியா சார்பில் மூத்த வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, அனாஹத், செந்தில் வேலவன், அபய் சிங் ஆகியோர் விளையாடினர். நேற்று நடைபெற்ற அரையறுதி போட்டியில் இந்தியா - எகிப்த் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் - ஜப்பான் அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் முடித்தனர். பின்னர், செட் கணக்கின் அடிப்படையில் ஹாங்காங் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் 3-1, 3-0, 3-0 என்ற செட் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement