இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.