அமெரிக்காவில் மாயமான 4 இந்திய முதியவர்கள் கார் விபத்தில் சிக்கி பலி: ஆன்மீக பயணத்தில் சோகம்
கடைசியாக கடந்த 29ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள பர்கிங் கிங் சிற்றுண்டி உணவகத்தில் 4 பேரும் தென்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிற்றுண்டி வாங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், மார்ஷல் கவுண்டி பகுதியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவலை கவுண்டியின் ஷெரிப் மைக் டவுஹெர்டி உறுதிபடுத்தி உள்ளார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.