தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க டி.ஆர்.பி. ராஜா தலைமையில் சிறப்பு குழு..!!

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 7ம் தேதி ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற்றது. அதில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

6.64 லட்சம்கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளை கேட்டறிந்து கண்காணிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த குழு இன்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைமை செயலாளர், தொழில்துறைசெயலாளர், மின்வாரியத்தலைவர், தகவல் தொழில்நுட்பத்தினுடைய செயலாளர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான முடிவுகளை மேற்கொள்ளும்.

சிங்கள் விண்டோவ்ஸ் சிஸ்டத்தின் மூலமாக அதற்கான அனுமதி வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக முதலீடுகளை தொடர்ந்து ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்த குழு கண்காணிக்கும். அந்த வகையில் 632 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ள நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக தொழில் நிறுவனங்களை தொடர்ந்து தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.