உலக இயன்முறை மருத்துவ நாளையொட்டி இயன்முறை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
சென்னை: உலக இயன்முறை மருத்துவ நாளையொட்டி இயன்முறை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உலக இயன்முறை மருத்துவ நாளில் இயன்முறை மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.நமது மருத்துவத் துறையின் மிக முக்கிய அங்கமாக இயன்முறை மருத்துவர்கள் இருக்கிறார்கள். மக்களின் உடல்நலத்தினை மேம்படுத்துவதிலும், உடலியக்கத்தைச் சீர்ப்படுத்துவதிலும்,
சுதந்திரமாக இயங்குவதிலும், பிறர் துணையை நாடாமல் வாழவும் இயன்முறை மருத்துவம் எனும் பிசியோதெரபி மிகப் பெரும் பங்காற்றி வருகிறது. எண்ணற்ற மக்களின் வாழ்வை மேம்படுத்தி வரும் இயன்முறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நம் அனைவரின் போற்றுதலுக்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களின் பணியைப் பாராட்டி, அத்துறை மேலும் வளர்ச்சி பெற்று, மானுட சமுதாயம் பயன் பெற இந்நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.