தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு பழங்கால சிற்பங்கள் கல்வெட்டுகள் மீட்டெடுப்பு

இலுப்பூர் : உலக மரபு வார விழாவையொட்டி இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியில் பழங்காலச் சிற்பங்கள் கல்வெட்டுகளை சூழ்ந்திருந்த வேலிக்கருவேல மரங்களை கல்லூரி மாணவிகள் அகற்றி கட்டுமானங்கள் மீட்டனர்.உலக மரபு வார விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியில் ஒரு சிறப்பு வரலாற்றுத் தகவல் பகிர்வு நிகழ்வு மற்றும் கருவேல முட்புதர்களை அகற்றும் நிகழ்வு இரு தினங்களாக நடைபெற்றது.

Advertisement

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆகியவை இணைந்து இந்த அரிய கள ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அழியும் நிலையில் உள்ள கோவில் எச்சங்கள் ஆய்வு, ​எருக்குமணிப்பட்டியில் பழங்காலத்தில் கோவில் இருந்த இடத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட பழமையான சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்தது.

​கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவிகள் ஸ்ரீரீநிதி, சுபாஷினி, லாவண்யா, ஹஸ்லீன் சிபானா, நந்தினி, பிரியா, ரேணுகா தேவி, மோகனா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்த செய்திகள் மற்றும் சிற்பங்களின் கலை நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்திரன் எருக்குமணிப்பட்டியின் தொன்மைச் சிறப்பையும், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் காலம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று தகவல்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் காயத்ரி தேவி பேசுகையில், இதுபோன்ற களப்பணிகள் மாணவர்களின் பாட அறிவை மேம்படுத்துவதோடு, நமது பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணரச் செய்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வு, புதுக்கோட்டை பகுதியின் பழமையான மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உள்ளூர் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News