தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகக்கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிக்கு காங்கேயம் காளையை சின்னமாக அமைத்தது ஜல்லிக்கட்டுக்கு பெருமை

*முதல்வர், துணை முதல்வருக்கு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் நன்றி

Advertisement

மதுரை : உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி சின்னமாக காங்கேயம் காளை பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு, முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு, மாடுபிடி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சென்னை, மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் ஹாக்கி மைதானத்தில் 14வது ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி நவ. 28ம் தேதி துவங்கி டிச. 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

கோயில் நகர் பெருமைக்குரிய மதுரையின் அடையாளங்களாக பாரம்பரியம், கலாச்சாரம், வீரம், ஜல்லிக்கட்டு என்று பட்டியல் நீள்கிறது. தை மாதம் பிறந்து விட்டால் மதுரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி வரும் 28ம் தேதி முதல் நடைபெறுவதால், மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்திற்கும் ‘காங்கேயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையை பிரபலப்படுத்தியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் யோகதர்ஷினி கூறும்போது, ‘‘10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து வருகிறேன். உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்த ஜல்லிக்கட்டு காளையின் சின்னத்தை இடம்பெறச் செய்தல் மூலம் எங்களது காளைகளின் பெருமையை உலகறிய செய்துள்ளனர். இதற்கு காரணமான முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி’’ என்றார்.

மாடுபிடி வீரர் மற்றும் ஹாக்கி வீரரான காளிதாஸ் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக கலந்து கொள்பவர்களும், ஹாக்கி மைதானத்தில் விளையாடுபவர்களும் ஒரே மனப்பக்குவத்தில் தான் இருக்க முடியும்.

மனது ஒருநிலைப்பட்டு அமைதியான ஒரு நிலைக்கு சென்றால்தான் காளையை அடக்க முடியும், ஹாக்கியில் அமைதியான ஆழ்நிலை தியானத்தில் இருப்பது போல் விளையாடினால்தான் வெற்றியை அடைய முடியும். ஹாக்கிக்கு மிகப்பொருத்தமானதாக ஜல்லிக்கட்டு காளை சின்னத்தை அறிவித்து வடிவமைத்தது பெருமிதம் கொள்ளச் செய்கிறது’’ என்றார்.

Advertisement

Related News