தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை விஏஓ காலிப்பணியிடத்தை நேரடியாக நிரப்ப தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை விஏஓ காலி பணியிடத்தை நேரடியாக நிரப்ப ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர்(பொ) அருள்ராஜ் மற்றும் விஏஓ அகமது பயாஸ் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கிராம நிர்வாக அலுவலர்களுக்கான 218 காலியிடங்களில் இடமாறுதலுக்காக ஒற்றை வழி இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்தார். பணியிட அனுபவ காலத்தை கணக்கிடாமல் இடமாறுதல் வழங்கப்பட்டது.

Advertisement

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது. 215 காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வானவர்கள் தங்களின் கல்வி சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்ான பணியிட மாறுதல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 218 விஏஓ பணியிடங்களுக்கு இடமாறுதல் வழங்காமல், டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனம் மூலம் நிரப்பக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். முறையாக இடமாறுதல் வழங்கிய பிறகே, நேரடி நியமனத்தை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இடைக்கால தடை விதித்தார். மேலும் மனுவிற்கு வருவாய் நிர்வாகத் துறை செயலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement

Related News