தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய் ஒரே வீட்டில் 2 ஆசிரியர்கள், 2 போலீஸ்

*சகோதரிகள் அசத்தல்

Advertisement

திருமலை : ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம், வேப்புமாக்குலப்பள்ளியை சேர்ந்தவர்கள் முனிவெங்கடப்பா- கவுரம்மா தம்பதி. இவர்களுக்கு வீணா, குமாரி, வாணி, வனஜாக்சி என 4 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டு முனிவெங்கடப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இருப்பினும் தனது 4 மகள்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க கல்வியால் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும் என முடிவு செய்த கவுரம்மா கூலி வேலைக்கு சென்று தனது 4 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்.

விடா முயற்சியுடன் படித்த 4 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர். இதில் மூத்த மகள் வீணா கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிளாக வேலை பெற்றார். வாணி கடந்த 2016ம் ஆண்டு 2ம் நிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

கடந்த மாதத்திற்கு முன்பு 3வது மகள் வனஜாக்சி போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்ந நிலையில் சமீபத்தில் சிரிஷா டி.எஸ்.சி. தேர்வு எழுதி 2ம் நிலை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

இதனால் கல்வியின் மூலம் வறுமையைப் போக்க முடியும் என்பதை கவுரம்மா குடும்பத்தினர் நிரூபித்துள்ளனர். தாயின் பெயரையும், குடும்ப மரியாதையையும் காப்பாற்றிய நான்கு மகள்கள் உண்மையிலேயே சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் என கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Related News