தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழைய கட்டிடத்தை அகற்றியபோது இரும்பு மேற்கூரை சரிந்து 2 தொழிலாளர்கள் பலி: வெட்டுவாங்கேணியில் பரிதாபம்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணி பகுதியில் ஜெம் கிரானைட் என்ற கம்பெனி இயங்கி வந்தது. இதனை அங்கிருந்து காலி செய்து விட்டதால், பழைய கட்டிடம் மற்றும் மேற்கூரையை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

சென்னையை சேர்ந்த அஹமது இப்ராஹிம் என்பவர், இந்த பணியை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 4 வருடங்களாக பணிபுரியும் ஒடிசாவை சேர்ந்த பாபு மாலிக் (32), சசிகாந்த் மாலிக் (42) உள்ளிட்ட 4 பேர், இந்த கம்பெனி வளாகத்தில் தங்கி, பழைய கட்டுமானத்தை பிரித்ததெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று கட்டிடத்தின் மேற்கூரையை பிரித்தபோது, எதிர்பாராதவிதமாக இரும்பு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் பாபு மாலிக், சசிகாந்த் மாலிக் ஆகிய இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News