தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளியிடம் ரூ.2.76 கோடி வரி கேட்டு ஜிஎஸ்டி அலுவலகம் நோட்டீஸ்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் கூலி தொழிலாளிக்கு ரூ 2.76 கோடி வரி மோசடியில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). செங்கல் சூளை கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது.

Advertisement

அதில்,ராஜ்குமார் சென்னை பல்லாவரத்தில் ஏ.எம்.ஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 82,898 வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாவும், எனவே உடனடியாக ஆஜராகி அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், உடனடியாக நேற்றுமுன்தினம் இரவு உம்ராபாத் போலீசில் புகார் செய்தார்.

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், `ஆதார் மற்றும் பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் எனது பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி ரூ.2.7 கோடிக்கு வரி மோசடி செய்துள்ளனர். தற்போது எனது பெயருக்கு ஜிஎஸ்டி அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Advertisement