தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோட்டத்தில் காவல் இருந்தபோது யானை மிதித்து தொழிலாளி பரிதாப சாவு: கடம்பூர் மலைப்பகுதியில் சோகம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏலஞ்சியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் அதே பகுதியில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தோட்டத்தில் வாழைகளை, யானைகளிடம் இருந்து காப்பாற்ற பிரபு இரவு நேரத்தில் காவல் பணி மேற்கொள்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் தோட்டத்தில் காவலில் ஈடுபட்டபோது, நள்ளிரவு ஒரு காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளின் உதவியுடன் பிரபு விரட்ட முயன்றார்.

Advertisement

அப்போது திடீரென பிரபுவை யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். தகவலறிந்து கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement