தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கே.வி.குப்பம் அருகே மழையின்போது இடிந்து விழுந்த கோயிலின் பகுதி சீரமைக்கும் பணிகள் தீவிரம்

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி செம்பட்டரை கிராமம் சின்னமலை சிங்கார வேலன் கோயில் மலை மீதுள்ளது. மூலவராக இருப்பவர் முருகர். இக்கோயிலில் வழிபட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

Advertisement

ஆடிக்கிருத்திகை, மயிலார் பண்டிகை, கந்த சஷ்டி, தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட முருகனுக்கு விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு விஷேச நாட்களில் வந்து செல்லும் இக்கோயில் மலை மீது இருப்பதால் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிமெண்ட்டில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மழையால் கடந்த 2 நாட்களுக்கு முன் சின்னமலை சிங்காரவேலன் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

சுற்றுசுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து கோயில் தரை பகுதியில் இருந்த கற்பூரம் ஏற்றி வழிபடும் பீடம், அங்கு பக்தர்களுக்காக வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, மின்விளக்குகளுடன் கூடிய கம்பம், அன்னதான கூடம், சமையல் கூடம், பக்தர்கள் அமரும் இடம் ஆகியவை தொடர்ந்து சரிந்து விழுந்தது. இதனால் கோயிலின் மூன்றின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.

தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதியில் உள்ள இடர்பாடுகளை அகற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று தாசில்தார் பலராமன் தலைமையில் அதிகாரிகள் கோயிலின் சரிந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த இடர்பாடுகளை ஜே.சி.பி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement