தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி; விறுவிறு போட்டியில் டிரா செய்த இந்தியா: வெற்றியை விளிம்பில் தவறவிட்ட ஜப்பான்

ஹாங்சூ: ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று, இந்தியா - ஜப்பான் அணிகள் இடையே நடந்த பரபரப்பான போட்டி, டிராவில் முடிந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள், சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகின்றன. பி பிரிவில், முதல் போட்டியில் தாய்லாந்து அணியை, 11-0 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வெற்றி வாகை சூடியிருந்த இந்திய அணி, நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஜப்பான் அணியுடன் மோதியது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் ஜப்பான் முதல் கோலை போட்டது. அதன் பின், 30வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா பிஸால் அணியின் முதல் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தார்.

Advertisement

போட்டி முடிய 3 நிமிடங்களே இருந்தபோது ஜப்பான் மீண்டும் ஒரு கோல் போட்டு அசத்தி, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதையடுத்து கோல் போடும் முயற்சியில் இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டினர். போட்டி முடிய வெறும் 40 விநாடிகளே இருந்த சமயத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி அணியின் 2வது கோலை போட்டார். அதனால், 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, நாளை நடக்கும் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது.

Advertisement

Related News