தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் 6வது போட்டி கொழும்பு நகரில் நேற்று, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்தது. டாஸ் போட்டபோது, பாக். அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

Advertisement

தவிர, இரு தரப்பு கேப்டன்களும் கைகுலுக்காமல் ஆட்டத்தை தொடங்கினர். முதலில் களமிறங்கிய இந்திய அணி துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த நிலையில், மந்தனா (23 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் பிரதிகா 31 ரன்னில் வீழ்ந்தார். அதன்பின், 3வது விக்கெட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் (19 ரன்) அவுட்டானார்.

பின்னர், ஹர்லீன் 46, ஜெமிமா ரோட்ரிகஸ் 32, ஸ்நேஹ் ராணா 20, தீப்தி சர்மா 25, ஸ்ரீசரணி 1 ரன்னில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 50வது ஓவரை வீசிய டயானா பெய்க், கடைசி இரு பந்துகளில் கிரந்தி கவுட் (8 ரன்), ரேணுகா சிங் (0) ஆகியோரை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

அதனால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாக்.கின் டயானா பெய்க் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, களம் இறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.

Advertisement

Related News