தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களால் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பது அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

Advertisement

புதுடெல்லி: பெண்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களால் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூக நலத்திட்டங்களால், இந்தியாவின் அரசியலில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகளின் சுகாதாரம், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கானப் பெண்களைத் தேர்தல் செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுத்தியுள்ளன.

இதுதொடர்பாக எஸ்பிஐ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘2024ல் நடந்த லோக்சபா தேர்தலுடன் 2019 தேர்தலை ஒப்பிடும்போது கூடுதலாக 1.8 கோடி பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்களின் வெளிப்பாடே இதற்குக் காரணமாகும். பெண்களிடையே 1% கல்வியறிவு அதிகரித்திருக்கிறது, 45 லட்சம் பெண்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்.

பெண்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளன. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாக, 2024 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கு இடையில் கூடுதலாக 45 லட்சம் பெண் வாக்காளர்கள் கல்வியறிவு மேம்பாட்டின் விளைவாக வந்துள்ளனர்.

மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளாலும், இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement