தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறிவிழுந்து பெண் பலி: பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

Advertisement

சென்னை: சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் 1வது தெருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் பள்ளத்தின் சிலப் அமைக்கப்படமால் இருந்துள்ளது. அதற்கு பதில் மழைநீர் வடிகால் பள்ளத்தின் மேல் மரப்பலகையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், தற்செயலாக பள்ளத்தில் பார்த்தபோது, நைட்டி அணிந்து இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலைகீழாக கிடந்தார். உடனே பொதுமக்கள் அவரை மேலே தூக்கி பார்த்த போது, அவர் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி இருந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, அப்போது சாலையோரம் வசித்து வந்த பெண் என தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் உடனே புதிய சிலாப்பை கொண்டு வந்து மூடினர்.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் வீரபாண்டி நகர் பகுதியில் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Related News