தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்: உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 137 பகுதியில் உள்ள பாரஸ் டைரா என்ற குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பராமரிப்பாளர்கள், வெளியில் இருந்து கொண்டு வந்து விடப்படும் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் 15 மாத குழந்தையின் பெற்றோர், தங்களது குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்த போது அதன் தொடைகளில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காப்பகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்த்த ேபாது, பெண் உதவியாளர் ஒருவர் குழந்தையை முகத்தில் அடிப்பதும், வேண்டுமென்றே குழந்தையை கீழே போடுவதும், குழந்தை வலியால் கதறி அழுவதும் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண் உதவியாளரை போலீசார் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில், குழந்தையைத் தாக்கிய பெண், 18 வயதுக்குட்பட்ட சிறுமி என்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு, சிறுமியை எப்படி நியமித்தார்கள் என்பது குறித்தும், காப்பகத்தின் உரிமம் மற்றும் பிற முறைகேடுகள் குறித்தும் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.