தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெண் எம்பி மஹூவா மொய்த்ராவுடன் மோதல் திரிணாமுல் கட்சி மக்களவை தலைமை கொறடா ராஜினாமா

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் மக்களவை தலைமை கொறடா கல்யாண்பானர்ஜி கூறுகையில்,‘‘காணொலி வாயிலாக முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், கட்சியில் உள்ள எம்பிக்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார். இதில் பழி என் மீது விழுந்துள்ளது. இதனால் அந்த பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்றார்.

மக்களவையில் காரசாரமாக பேசும் கல்யாண் பானர்ஜிக்கும் இன்னொரு எம்பியான மஹூவா மொய்த்ராவுக்கும் மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் கீர்த்தி ஆசாத் எம்பியும் கல்யாண் பானர்ஜியும் பொது இடத்தில் ஒருவரையொருவர் விமர்சித்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இது கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரசின் மக்களவை குழு தலைவர் பதவியில் இருந்து சுதிப் பந்தோபாத்யாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மக்களவை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.