தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் மூடநம்பிக்கை; சூனியம் வைத்ததாக கூறி பெண் கொடூர கொலை: கிராமத்தினர் வெறிச்செயல்

சோன்பத்ரா: சூனியம் வைப்பதாகச் சந்தேகப்பட்டு, பெண் ஒருவரை கிராம மக்கள் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டம் பர்சோயி கிராமத்தை சேர்ந்த பாபுலால் கர்வார் (57) மற்றும் அவரது மனைவி ராஜ்வந்தி (52) ஆகியோர், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு சூனியம் வைத்ததாக கிராமத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் தம்பதிகள் வீட்டில் இருந்தபோது, கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கிராம மக்கள் சிலர் அவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில், ராஜ்வந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அவரது கணவர் பாபுலால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ‘குலாப் என்ற கிராமவாசி தலைமையில் பலர் பாபுலால் வீட்டிற்குள் புகுந்து, தம்பதியினர் மீது சூனியம் வைப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இந்த தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முக்கியக் குற்றவாளியான குலாப் கைது செய்துள்ளோம்’ என்றார்.

Advertisement

Related News