மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது: மும்பை போலீஸ் அதிரடி
Advertisement
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணுக்கு எந்தக் குற்றப் பின்னணி இல்லை என்றும், இருப்பினும், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு மூன்று கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Advertisement