தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரகடம் அருகே காதலனை கத்தியால் குத்திய பெண் கைது

ஸ்ரீபெரும்புதூர்: அசாம் மாநிலம், சீல்பேரி பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் சையத் (31). இவர், ஒரகடம் அருகே சென்னகுப்பம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். முன்னதாக, அசாம் மாநிலம், குவாதி பகுதியைச் சேர்ந்த பரிதாபேகம் (31) என்ற பெண்ணுடன் சையத்துக்கு பழக்கம் ஏற்பட்டு, இங்கு ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக சையத்வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடன் இருந்த பரிதா பேகம் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, அடிதடி தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இம்ரான் சையத்தின் நடவடிக்கையில் பரிதா பேகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.

Advertisement

இதுதொடர்பாக சையத்திடம் அவர் கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான பரிதா பேகம், காய்கறி நறுக்கும் கத்தியால் இம்ரான் சையத்தை சரமாரி குத்தியதில் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, பரிதா பேகத்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன், மனைவி இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News