தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: நாகர்கோவில் பெண் கைது

சென்னை: மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரம்யாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2022ல் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். சுகாதாரத்துறையில் செல்வாக்கு, அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்று கூறி அந்தோணிதாஸ், ரம்யா அறிமுகமாயினர். எம்.பி.பி.எஸ். சீட் பெற செலவாகும் என்று கூறி பல தவணைகளாக ரூ.60 லட்சம் பெற்றுள்ளனர்.

Advertisement

ரோஸ்மேரியை சென்னைக்கு வரவழைத்து மகளுக்கு சீட் கிடைத்துவிட்டதாகக் கூறி போலி அட்மிஷன் ஆர்டரை காட்டி மோசடி செய்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஸ்மேரி கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். பல்வேறு தவணைகளாக ரூ.29 லட்சத்தை திருப்பிக்கொடுத்தவர்கள் எஞ்சிய தொகையை தரவில்லை. 2024 ஆகஸ்டில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ரோஸ்மேரி புகார் அளித்தார். புகாரை அடுத்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த ரம்யா சோழிங்கநல்லூரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக் கூறி ரம்யா ஏற்கனவே பலரை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement