தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் விரிவாக்கம் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா கொண்டாட்டம்

*காணொலி நிகழ்ச்சியில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

Advertisement

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் கருப்பொருளில், தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழாவில், 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உட்பட விரிவாக்க திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்த நிகழ்ச்சியின் நேரடி காணொலி காட்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, இஸ்லாமிய கல்லூரி வாணியம்பாடி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூர், இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாணியம்பாடி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என 30 கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும், கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் அமர்ந்து காண்பதற்கு முறையான அனைத்து விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரியா ஆந்தோனி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement