தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனை அருகே மண்வெட்டியால் அடித்து பெண் கொலை

*முன்னாள் ராணுவ வீரர் கைது

Advertisement

அருமனை : அருமனை அருகே பாதை தகராறில் மண்வெட்டியால் அடித்து அண்ணன் மனைவியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி வசந்தா (53). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரகலாதன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தற்போது கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரகலாதன் இறந்து போன கிருஷ்ணசாமியின் தம்பி ஆவார். இந்தநிலையில் வசந்தா - பிரகலாதன் இடையே கடந்த 3 மாதமாக பாதை சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.

பிரகலாதன் சமீபத்தில் கார் வாங்கி உள்ளார். அவரது வீட்டிற்கு செல்லும் பாதை 3 அடி அளவில் குறுகலாக உள்ளது. இதனால் காரை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதையை வரிவாக்கம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது பயன் அளிக்க வில்லை.

இதனால் பிரகலாதன் காரை தெருவில் நிறுத்தி வந்துள்ளார். பாதையை விரிவாக்கம் செய்ய வசந்தா இடையூறாக இருப்பதாக நினைத்து அண்ணியான வசந்தாவிடம், பிரகலாதன் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வசந்தா, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பிரகலாதன், அங்கிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

அப்போது மண்வெட்டி கைபிடியால் வசந்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் வசந்தா மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வசந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து அருமனை போலீசார் பிரகலாதன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அருமனை இன்ஸ்பெக்டர் சாந்தி சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த வழக்ைக கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரகலாதனை கைது செய்தனர்.

Advertisement

Related News