தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஸ் சிலிண்டரால் அடித்து பெண் கொடூரக் கொலை: போதை கணவன் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குடிபோதையில் குழந்தைகள் கண்ணெதிரே மனைவியை காஸ் சிலிண்டரால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளிக்கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (54). அவரது மனைவி கவிதா (46). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முந்திரி வியாபார புரோக்கரான மதுசூதனன், அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது வழக்கமாகும். நேற்று நள்ளிரவு வழக்கம்போல போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

Advertisement

பின்னர் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை எடுத்து கவிதாவை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பயந்த குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி பக்கத்து வீட்டினரிடம் சம்பவம் குறித்து கூறினர்.

இதுகுறித்து உடனடியாக கிளிக்கொல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது கவிதா இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதுசூதனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News